கருமலை பஜாரில் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை - நகர மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து கீழே விழுந்த நிலையில், ரூ.7 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிதாக பொது கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜையில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்றார்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பஜாரில் பயணிகள் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்து, கட்டிடம் உடைந்து கீழே விழுந்து பயணிகள் நிழற்குடைக்குள் அமர முடியாமல் இருந்து வந்தது.



இந்த நிலையில் அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடையை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜையும், அதன் அருகில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்த முடியாமல் சிதிலமடைந்த பொது கழிப்பிடமும் சுமார் 19 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ளதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம், 12வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பரசன், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...