கருமலை பஜாரில் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை - நகர மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து கீழே விழுந்த நிலையில், ரூ.7 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிதாக பொது கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜையில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்றார்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பஜாரில் பயணிகள் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்து, கட்டிடம் உடைந்து கீழே விழுந்து பயணிகள் நிழற்குடைக்குள் அமர முடியாமல் இருந்து வந்தது.



இந்த நிலையில் அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடையை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜையும், அதன் அருகில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்த முடியாமல் சிதிலமடைந்த பொது கழிப்பிடமும் சுமார் 19 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ளதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம், 12வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பரசன், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...