ஞான நிலையை எட்டிய வயதில் மு.க.ஸ்டாலின் முதல்வராகி இருக்கிறார்..! - நடிகர் தம்பி ராமையா புகழாரம்

சிறு படம் தயாரிப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதைப் போன்றது. ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும், என்று நடிகர் தம்பி ராமையா தெரிவித்தார்.


கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற முதல்வர் புகைப்பட கண்காட்சியின் இறுதி நாளில் நடிகர் தம்பி ராமையா பார்வையிட்டார்.

கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தமிழக முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டு பார்வையிட்ட நடிகர் தம்பி ராமையா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது:

வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகங்களில் படித்திருக்கிறோம், பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம், காட்சிகளாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் வாழும் தலைவர் ஒருவருடைய வரலாற்றைக் கண் முன்னால் பார்ப்பது என்பது மிகப்பெரிய கொடுப்பனை.

இந்த ஏழு நாட்களும் முண்டியடித்து கொண்டு இந்த காட்சியை பார்த்துச் சென்றவர்களெல்லாம் ஒரு சுகமான காட்சியைப் பார்த்ததாகத் தான் சொல்வார்கள்.

ஒரு இரவிலிருந்து விட்டு மறு இரவில் காணாமல் போவது வெற்றி அல்ல, ஒரு இடத்தில் அழுத்தம் திருத்தமாக வந்து அமர்வதற்கு மிகப்பெரிய தியாகம் இருக்க வேண்டும். கண்ணீர் விட்டிருக்க வேண்டும், துன்பங்களை அனுபவித்து இருக்க வேண்டும், குடும்பத்தை நேசிக்கின்ற ஒரு பண்பு இருக்க வேண்டும்.

இந்த கண்காட்சியை பார்க்கும்போது தமிழ்நாட்டின் உடைய முதல்வர் ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல எனத் தெரிகிறது.

இந்த கண்காட்சியின் நிறைவுப் பகுதி வரும்போது எனக்கே நிகழ்வு ஏற்படுகிறது. 1976 இல் நெருக்கடியான காலகட்டத்தில் நிறைய தலைவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு விலகிச் சென்று விட்டனர், அவ்வாறு விலை கொடுத்து விட்டு விலகி சென்று இருக்கலாம். ஆனால் எழுதி கொடுக்க மறுத்ததன் விளைவு சிட்டிபாபு என்பவரது உயிர் போகிறது.

அங்கு தான் ஸ்டாலின் என்ற மகத்தான தலைவன் உருவாகிறான். அவ்வளவு சுலபத்தில் ஸ்டாலின் அந்த இடத்தில் அமரவில்லை. முத்தமிழறிஞர் கலைஞரை கைது செய்த போது அதிமுகவினரும் அழுதார்கள். அதேபோன்று கலைஞருக்கு இடம் கிடைத்து விட்டது என்ற போது தமிழகமே வந்தது.

சிறு படம் தயாரிப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதைப் போன்றது. ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாகத் தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...