கோவை ஈஷாவில்‌ களைக்கட்டிய தமிழ்‌ புத்தாண்டு கொண்டாட்டம்!

தமிழ்‌ புத்தாண்டை ஒட்டி ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள்‌ பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர்‌. தமிழகம்‌ முழுவதும்‌ இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள்,‌ தேவியை தரிசனம்‌ செய்து அருளைப்‌ பெற்றனர்‌.


கோவை: கோவை ஈஷா மையத்தில் தமிழ்புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



கோவை ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்க பைரவி திருமேனியை ஆதியோகி சிலையிலிருந்து ரதத்தில்‌ வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌.



இதை தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா மற்றும்‌ ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின்‌ பக்தி பாடல்களுடன்‌ கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்‌, லிங்க பைரவியில்‌ சிறப்பு அபிஷேகமும்‌ நடைபெற்றது.

இதுதவிர, பக்தி நயம்‌ ததும்பும்‌ தேவாரப்‌ பாடல்களை தமிழக கிராமங்கள்‌ தோறும்‌ கொண்டு சேர்க்க வேண்டும்‌ எனக் கடந்த மஹாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார்‌. அதன்‌ ஒரு பகுதியாக, ஆதியோகி முன்பு தேவாரப்‌ பாடல்களை அர்ப்பணிக்கும்‌ 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும்‌ வழங்கப்படும்‌ என அறிவித்தார்‌.



இதன்‌ தொடக்கமாக, சென்னையைச்‌ சேர்ந்த 9 வயது சிறுவன்‌ கரிய நாராயணன்‌ தோடுடைய செவியன்‌, பித்தா பிறைதடி, வானனை மதி கடிய போன்ற தேவாரப்‌ பாடல்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்து அவரின்‌ திருமேனியை பரிசாக பெற்றார்‌.



9 வயதே ஆன இச்சிறுவன்‌ தனது தந்‌தை ஹரிஹரன்‌ சிவராமனிடமிருந்து 5 வயது முதல்‌ கர்நாடக சங்கீதம்‌ கற்று வருகிறார்‌. இவர்‌ தூர்தர்ஷன்‌ பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும்‌ பல்வேறு கோவில்‌ திருவிழாக்களிலும்‌ பக்தி பாடல்கள்‌ பாடியுள்ளார்‌.

அவருடன்‌ சேர்ந்து ஏராளமான குழந்தைகள்‌ தேவாரம்‌ பாடி பரிசுகள்‌ பெற்றனர்‌. முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும்‌ இசைக்கப்பட்டது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...