கோவை ஈஷாவில்‌ களைக்கட்டிய தமிழ்‌ புத்தாண்டு கொண்டாட்டம்!

தமிழ்‌ புத்தாண்டை ஒட்டி ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள்‌ பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர்‌. தமிழகம்‌ முழுவதும்‌ இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள்,‌ தேவியை தரிசனம்‌ செய்து அருளைப்‌ பெற்றனர்‌.


கோவை: கோவை ஈஷா மையத்தில் தமிழ்புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



கோவை ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்க பைரவி திருமேனியை ஆதியோகி சிலையிலிருந்து ரதத்தில்‌ வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌.



இதை தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா மற்றும்‌ ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின்‌ பக்தி பாடல்களுடன்‌ கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்‌, லிங்க பைரவியில்‌ சிறப்பு அபிஷேகமும்‌ நடைபெற்றது.

இதுதவிர, பக்தி நயம்‌ ததும்பும்‌ தேவாரப்‌ பாடல்களை தமிழக கிராமங்கள்‌ தோறும்‌ கொண்டு சேர்க்க வேண்டும்‌ எனக் கடந்த மஹாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார்‌. அதன்‌ ஒரு பகுதியாக, ஆதியோகி முன்பு தேவாரப்‌ பாடல்களை அர்ப்பணிக்கும்‌ 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும்‌ வழங்கப்படும்‌ என அறிவித்தார்‌.



இதன்‌ தொடக்கமாக, சென்னையைச்‌ சேர்ந்த 9 வயது சிறுவன்‌ கரிய நாராயணன்‌ தோடுடைய செவியன்‌, பித்தா பிறைதடி, வானனை மதி கடிய போன்ற தேவாரப்‌ பாடல்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்து அவரின்‌ திருமேனியை பரிசாக பெற்றார்‌.



9 வயதே ஆன இச்சிறுவன்‌ தனது தந்‌தை ஹரிஹரன்‌ சிவராமனிடமிருந்து 5 வயது முதல்‌ கர்நாடக சங்கீதம்‌ கற்று வருகிறார்‌. இவர்‌ தூர்தர்ஷன்‌ பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும்‌ பல்வேறு கோவில்‌ திருவிழாக்களிலும்‌ பக்தி பாடல்கள்‌ பாடியுள்ளார்‌.

அவருடன்‌ சேர்ந்து ஏராளமான குழந்தைகள்‌ தேவாரம்‌ பாடி பரிசுகள்‌ பெற்றனர்‌. முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும்‌ இசைக்கப்பட்டது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...