எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை விட அண்ணாமலை பெரிய ஆளுமையில்லை..! - ஆர்எஸ் பாரதி விமர்சனம்

திமுக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை இன்னும் 15 நாட்களுக்கு சமர்பிக்கவில்லை என்றால் வழக்குத் தொடரப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


சென்னை: திமுக வாங்கி குவித்துள்ளதாக பட்டியல் வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் ஆதாரங்களை காட்டவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50 ஆயிரத்து 219 கோடி, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூ.5,442.39 கோடி, அமைச்சர் உதயநிதிக்கு ரூ.2,039 கோடி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரூ.1,023.22 கோடி, மைச்சர் கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, எம்.பி. கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதிமாறனுக்கு ரூ.12,450 கோடி, டி.ஆர்.பாலுவுக்கு ரூ.10,841.10 கோடி, அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ரூ.579.58 கோடி, கலாநிதி வீராசாமிக்கு ரூ.2,923.29 கோடி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது கவுதம் சிகாமணிக்கு ரூ.581.20 கோடி என சொத்துக்கள் உள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இவை என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.



இதைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திமுகவினரின் சொத்து பட்டியலுக்கு அண்ணாமலை ஆதாரம் தர வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணாமலை மீது திமுகவினர் தனித்தனியாக வழக்கு போடுவார்கள். ஜூனில் அவர் பாத யாத்திரை போக மாட்டார். கோர்ட் கோர்ட்டாக தான் போவார் என்றார்.

திமுக சார்பில், திமுகவிற்கு ரூ.1408.9 சொத்துள்ளதாகவும், திமுகவிற்கு ரூ.3418 கோடியில் உள்ளதாகவும், அதேபோல் திமுக சார்பில் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்கள் ரூ.34,184.71 கோடியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவற்றிற்கான சொத்துப் பத்திரங்கள் மற்றும் ஆதாரங்களை இன்னும் 15நாட்களுக்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அமைப்புச் செயலாளரான என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...