சூலூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு!

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி தாசில்தார் அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பொது பாதையை தனிநபர் இருவர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு வீரங்காடு பகுதியை சுற்றிலும் சொந்தமாக தோட்டம் உள்ளது. அப்பகுதியில் மாரியப்பன் உள்பட 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனை கண்டித்து, சூலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தை நாடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...