தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை!

தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்க சுமார் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த பூமிபூஜையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் 2022 மற்றும் 23 நிதியாண்டிற்கான 15வது நிதி குழு மாநிலத்தில் 29 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டது.

அதில் உடுமலை சாலை ஏழாவது வார்டு பகுதியில் குறிஞ்சி நகர் மற்றும் சலவையாளர் காலனிக்கு சிமெண்ட் சாலை அமைக்க பதினைந்து லட்சமும் அலங்கியம் சாலையில் உள்ள மெட்ரோ சிட்டியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, அந்த பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் பைப் லைன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் மெட்ரோ சிட்டி மற்றும் மலையம்மன் நகர் ஆகிய 2 நகர்களுக்கு 14 லட்சம் உள்ளிட்ட மொத்தம் 29 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ரமேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், ஊராட்சி துணை தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர் சரஸ்வதி தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் பெரியசாமி ஏற்பாடு செய்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...