என்.டி.சி ஆலைகள் விவகாரம் - ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவிப்பு

கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 7 என்டிசி நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்காததை கண்டித்து வரும் ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் என்டிசி நூற்பாலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி நூற்பாலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

தமிழகத்தில் உள்ள 7 ஆலைகள் உட்பட நாடு முழுவதும் 23 என்டிசி நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. கொரோனா நோய்தொற்று முதல் அலை பரவிய 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி முதல் என்டிசி நூற்பாலைகளில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டன. மூன்றாண்டுகளாக மீண்டும் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலர், என்டிசி தலைமை அலுவலக உயரதிகாரிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகளை குறித்து எடுத்துக்கூறி மனு அளித்தும் இதுவரை உற்பத்தி தொடங்கப்படவில்லை.

எனவே, மத்திய அரசை கண்டித்து கோவைக்கு வரும் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் என்டிசி தொழிலாளர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டுவது, ஏப்ரல் 20-ம் தேதி கோவை 5 உட்பட தமிழகத்திலுள்ள 7 என்டிசி நூற்பாலைகளின் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், எச்எம்எஸ் தொழிற்சங்கம் ராஜாமணி, ஏடிபி கோபால், சிஐடியு பத்மநாபன், ஐஎன்டியுசி பாலசுந்தரம், ஏஐடியுசி சிவசாமி, எம்எல்எப் தியாகராஜன், அப்தேக்கார் சங்கம் நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...