என்.டி.சி ஆலைகள் விவகாரம் - ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவிப்பு

கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 7 என்டிசி நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்காததை கண்டித்து வரும் ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் என்டிசி நூற்பாலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி நூற்பாலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

தமிழகத்தில் உள்ள 7 ஆலைகள் உட்பட நாடு முழுவதும் 23 என்டிசி நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. கொரோனா நோய்தொற்று முதல் அலை பரவிய 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி முதல் என்டிசி நூற்பாலைகளில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டன. மூன்றாண்டுகளாக மீண்டும் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலர், என்டிசி தலைமை அலுவலக உயரதிகாரிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகளை குறித்து எடுத்துக்கூறி மனு அளித்தும் இதுவரை உற்பத்தி தொடங்கப்படவில்லை.

எனவே, மத்திய அரசை கண்டித்து கோவைக்கு வரும் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் என்டிசி தொழிலாளர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டுவது, ஏப்ரல் 20-ம் தேதி கோவை 5 உட்பட தமிழகத்திலுள்ள 7 என்டிசி நூற்பாலைகளின் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், எச்எம்எஸ் தொழிற்சங்கம் ராஜாமணி, ஏடிபி கோபால், சிஐடியு பத்மநாபன், ஐஎன்டியுசி பாலசுந்தரம், ஏஐடியுசி சிவசாமி, எம்எல்எப் தியாகராஜன், அப்தேக்கார் சங்கம் நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...