சொத்துவரி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்..! - பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளதை, சில அரசியல் கட்சிகள் அரசியலாக்கி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை: சொத்துவரி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டபோது மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரிபல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இதைத் தொடர்ந்து, வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சிக்கு சிறப்பு சலுகையாக 50% சொத்து வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழகத்தில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட போது பொள்ளாச்சி நகராட்சிக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது குறைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது கடந்த மார்ச் 31ஆம் தேதி 50 சதவீதம் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு வணிகர்கள் பொதுமக்கள் தற்போது முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு சில அரசியல் கட்சியினர் இந்த பிரச்சனையை அரசியலாக்கி சுயலாபத்திற்காக மக்களிடம் தவறான பொய்யான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சொத்து வரி குறைக்கப்பட்டதற்கான வழிகாட்டு முறைகள் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும். இது குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் நகராட்சியை பொதுமக்கள் அணுகலாம். வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...