திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களை அதிகப்படுத்துக..! - மாதர் சங்கத்தினர் கோரிக்கை

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் தொகைக்கேற்ப ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.



திருப்பூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியர்கள் அதிகப்படுத்த மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், 36 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து குழுவினர் கூறியதாவது:



திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கேற்ப ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும். அதிக நோயாளிகள் வரக்கூடிய நிலையில் அவர்கள் கீழே படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை தொடர்கிறது.

கட்டிடத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தி தர வேண்டும், பிரேதப் பரிசோதனைக்கு தினந்தோறும் 5 முதல் 15 பிரேதங்கள் வரக்கூடிய நிலையில் ஒரே ஒரு நிரந்தர ஊழியர் மட்டுமே பணிபுரிவதால் பிரேதப் பரிசோதனைக்காக வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு அவர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை நீடிக்கிறது. ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் தேவையான அளவு மருத்துவமனையில் இல்லை, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் அவசர உதவிக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் நிலவுகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் கூட அவைகளுக்கு ஓட்டுநர் இல்லாததால்,அவை இயக்கப்படாத சூழல் நிலவுகிறது.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்போது உள்ள மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுநர்களை நியமித்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை மனுக்களாக சுகாதாரத் துறை அலுவலர்களிடம் வழங்க உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...