கோவை அரசு கல்லூரியில் அரசியல் சார் அறிவியல் துறை மன்ற விழா

கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் சார் அறிவியல்துறை மன்றவிழா தொடங்கியுள்ளது. அதில் மாணவர்கள் உருவாக்கிய நம்பிக்கை பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசியல் சார் அறிவியல் துறை சார்பில் மன்ற விழா கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் மாணவர்கள் உருவாக்கிய பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்துக் கொண்டார்.



பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் அனைவரும் குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டும். வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது. கல்லூரி வாழ்க்கையில் உங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

இங்கு கற்றுக்கொள்ளும் தனித்திறமைகள் உங்கள் வாழ்வில் நிச்சயம் உதவும், என்றார்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் உலகி, அரசியல் சார் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...