கோவை அரசு கல்லூரியில் அரசியல் சார் அறிவியல் துறை மன்ற விழா

கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் சார் அறிவியல்துறை மன்றவிழா தொடங்கியுள்ளது. அதில் மாணவர்கள் உருவாக்கிய நம்பிக்கை பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசியல் சார் அறிவியல் துறை சார்பில் மன்ற விழா கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் மாணவர்கள் உருவாக்கிய பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்துக் கொண்டார்.



பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் அனைவரும் குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டும். வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது. கல்லூரி வாழ்க்கையில் உங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

இங்கு கற்றுக்கொள்ளும் தனித்திறமைகள் உங்கள் வாழ்வில் நிச்சயம் உதவும், என்றார்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் உலகி, அரசியல் சார் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...