கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி தலைமையில் அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



முன்னதாக அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தமிழ்நாடு விசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...