கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத் தீ!

கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ பற்றியெரிந்து கொண்டுள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக நீலகிரி மற்றும் சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து கூடுதல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், 40 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மூங்கில் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டது.



தற்போதுவரை, சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்ட நிலையில், சிறுமுகை மற்றும் நீலகிரி வனச்சரகத்தில் இருந்து கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் குழு தீயை அணைக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் திசைக்கு ஏற்ப தீயை அணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...