கோவையில் குறைதீர் மனுநாள் கூட்டம் - 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு!

கோவை அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மனு நாள் முகாம் நடைபெற்றது. இதில், 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திபாடி குமார் தலைமையில் குறைதீர் மனு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இதில் அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுக்கு கீழ்ப்பகுதியில் பயனீர் மில் ரோடு முதல் E2 காவல் நிலையம் வரை மழைநீர் வடிகால் பாதை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்களாக அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்யக் கோரியும், அதேபகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்க கோரியும் 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...