கோவையில் குறைதீர் மனுநாள் கூட்டம் - 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு!

கோவை அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மனு நாள் முகாம் நடைபெற்றது. இதில், 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திபாடி குமார் தலைமையில் குறைதீர் மனு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இதில் அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுக்கு கீழ்ப்பகுதியில் பயனீர் மில் ரோடு முதல் E2 காவல் நிலையம் வரை மழைநீர் வடிகால் பாதை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்களாக அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்யக் கோரியும், அதேபகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்க கோரியும் 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...