கோவையில் குறைதீர் மனுநாள் கூட்டம் - 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு!

கோவை அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மனு நாள் முகாம் நடைபெற்றது. இதில், 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திபாடி குமார் தலைமையில் குறைதீர் மனு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இதில் அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுக்கு கீழ்ப்பகுதியில் பயனீர் மில் ரோடு முதல் E2 காவல் நிலையம் வரை மழைநீர் வடிகால் பாதை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்களாக அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்யக் கோரியும், அதேபகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்க கோரியும் 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...