உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - உடலில் கத்திபோட்டு பக்தர்கள் நூதன வழிபாடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பில் ஏராளமான பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள், உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

இதனையடுத்து ஏப்ரல் 4ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் கொடி கொடியேற்றம் பூவோடு எடுத்தல் என தினமும் பல்வேறு அலங்கார ஊர்திகளில் அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது இந்நிலையில் இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பாக உடம்பில் கத்திபோட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.



பசுபதி வீதி பகுதியில் துவங்கிய ஊர்வலம் தளி ரோடு, தங்கம்மாள் ஓடை, கொல்லம் பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.



மேலும் இந்த கத்தி போடும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மேள தாள வாத்தியங்கள் முழுங்க தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...