உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - உடலில் கத்திபோட்டு பக்தர்கள் நூதன வழிபாடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பில் ஏராளமான பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள், உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

இதனையடுத்து ஏப்ரல் 4ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் கொடி கொடியேற்றம் பூவோடு எடுத்தல் என தினமும் பல்வேறு அலங்கார ஊர்திகளில் அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது இந்நிலையில் இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பாக உடம்பில் கத்திபோட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.



பசுபதி வீதி பகுதியில் துவங்கிய ஊர்வலம் தளி ரோடு, தங்கம்மாள் ஓடை, கொல்லம் பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.



மேலும் இந்த கத்தி போடும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மேள தாள வாத்தியங்கள் முழுங்க தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...