துடியலூர் அருகே குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து - 3 மணி நேரம் போராடி தீ அணைப்பு!

துடியலூர் அடுத்த அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் புகை மூட்டம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதுமாக புகை மூட்டமாக காட்சியளித்தது.

துடியலூரை அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.

இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் தீ விபத்து ஏற்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இங்குள்ள குப்பைகளில் இருந்து புகை வந்துள்ளது.



தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திறணல் ஏற்பட்டுள்ளது.



தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...