பல்லடம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சோகம்!

பல்லடம் அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத், நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே நண்பர்களுடன் தொட்டியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே வரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - அனுசுயா தம்பதி. இவர்களுக்கு பரத் மற்றும் தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பரத் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு தற்போது கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள நிலையில் இன்று தனது நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளிக்க சென்றுள்ளார்.

பரத்திற்கு நீச்சல் தெரியாத நிலையில் தொட்டியில் குளிப்பதற்காக குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்த பரத்தை அவரது நண்பர்கள் மீட்டுள்ளனர்.



இதுகுறித்து பரத்தின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். பின்பு பரத்தை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



நீச்சல் தெரியாமல் நண்பர்களோடு குளிக்கச் சென்ற போது கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...