கிணத்துக்கடவு அருகே திமுக ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் - பொதுமக்கள் முற்றுகை!

கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கிணத்துக்கடவில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட நம்பர் 10 முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு அனுமதியின்றி கிராவல் மணல் லாரியில் கொண்டு செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்குமார் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில், காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி நம்பர் 10 முத்தூர் பகுதி சேர்ந்த கிராம மக்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தை திடீரென முற்றறுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதி சேர்ந்த காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம், ஈஸ்வரன், சாந்தலிங்கம் ஆகிய ஐந்து பேரும் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈஸ்வரன், சாந்தலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...