மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த பாகுபலி யானை! - பொதுமக்கள் அச்சம்

வனப்பகுதியிலிருந்து வெளியேறி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் புகுந்த பாகுபலி யானை, பொருட்களை அடித்து நொறுக்கி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது.

இந்நிலையில் அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

கடந்த 3 மாதங்களுக்கு பின் பாகுபலி யானை வனப்பகுதியிலிருந்து வெளியேறி நெல்லிமலை, சமயபுரம் பகுதியில் சுற்றி திரிகிறது. கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே வந்த யானை ஊருக்குள் வந்து சென்றது.

இந்நிலையில் நேற்று முதல் பகல் நேரத்திலும் யானை கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் யானை செல்லும் வழியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் இருக்கும் பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்கிறது.

எனவே பகல் நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...