திருப்பூரில் ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் விலை உயர்வு, தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளால் பனியன் தொழில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்த சூழலில் பனியன் தொழிலை நம்பி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக வாகன ஓட்டுனர்களை வெகுவாக பாதிக்கும் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட ஏ ஐ டி யு சி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், ஆவணங்கள் சரியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக வழக்கு போடுவோம் என போலீசார் மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுநர்களை ஒருமையில் கேவலமாக பேசுகின்றனர்.



திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு தாராபுரம் ரோடு பல்லடம் ரோடு அவிநாசி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நாள்தோறும் பலமுறை ஆவணங்களை சரி பார்ப்பதாக கூறி வாகனங்களை காத்திருக்க வைக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.



இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...