கோவையில் மனநல பாதிப்புடன் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர் - சிகிச்சை அளித்து உறவினர்களிடம் ஒப்படைப்பு!

கோவையில் மனநல பாதிப்புடன் சுற்றித்திரிந்த சட்டீஸ்கரை சேர்ந்த ஜித்தேந்தர் எனும் இளைஞரை மீட்ட உதவும் கரங்கள் அமைப்பு, அவருக்கு 4 ஆண்டுகள் சிகிச்சை அளித்தது. குணமடைந்து நினைவு திரும்பியதும், இளைஞரை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் மனநலம் பாதிப்புடன் சுற்றி திரிந்த வட மாநில இளைஞர் மீட்கப்பட்டு 4 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து சட்டீஸ்கர் மாநில போலீஸ் காவலரான அவரது சகோதரரிடம் ஒப்படைப்பட்டார்.

கோவை மாவட்டத்தில் உதவும் கரங்கள் என்ற தன்னார்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது, மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டு, சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அமைப்பினர், கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 700 பேரை மீட்டு சிகிச்சையளித்து பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனக்கு தானே பேசியவாறு சாலையில் மோசமான நிலையில் சுற்றித்திரிந்த வட மாநில இளைஞர் ஒருவரை இந்த அமைப்பினர் மீட்டனர். அவருக்கு உணவு, உடைகள் வழங்கி, மனோ தத்துவ நிபுணர்கள், மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் அவர் குணமடைந்து பழைய நினைவுகள் வந்துள்ளது. விசாரித்ததில் அவர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கோபால் நிஷாத் என்பவரது மகன் ஜித்தேந்தர் (34) என்பது தெரியவந்தது.



இதையடுத்து தன்னார்வ அமைப்பினர் இணைய தளம் மூலம் ஜிதேந்தர் கூறிய அடையாளங்களை வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அழைத்து பேசிய போது, ஜித்தேந்தர் சகோதரர் சட்டீஸ்கர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, ஜிதேந்தர் அவரது சகோதரர் தான் என்பது தெரியவந்தது. கடந்த 2015-ல் வீட்டில் இருந்த ஜித்தேந்தர் மாயமாகியுள்ளார். இது குறித்து உள்ளூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்தனர்.

ஒரு கட்டத்தில் அவர் உயிரோடு இருக்க மாட்டார் என உறவினர்கள் எண்ணிய நிலையில், தற்போது அவர் கோவையில் மீட்கப்பட்டு, உடல் நலத்துடன் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

நான்கு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஜிதேந்தரை சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து அழைத்து செல்ல வந்த அவரது சகோதரர் தேவேந்திர நிஷாத் தனது சகோதரரை கண்டதும் கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து அவர் எடுத்து வந்த ஆவணங்களை ஒப்படைத்த பின் ஜித்தேந்தரை அவரது அண்ணணிடம் ஒப்படைத்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் ஜித்தேந்தர் தனது சொந்த ஊரான சட்டீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...