உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கான இளஞ்சூடு ஏற்றும் விழா

உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவையை தொடங்க பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: அமராவதி சர்க்கரை ஆலையில் அரவைக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்நிலையில் 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவைக்கான பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி இன்று ஆலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், விவசாயிகள் ஆலை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



அப்போது கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகளை சூழ்ந்து கொண்ட விவசாயிகள், இந்த ஆலை திடீரென அரவையின் போது பழுதாகி விடுகிறது. இதனால் கரும்பு அறுவடை செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரவை துவங்கியவுடன் ஆலை எந்த தங்கு தடையும் இன்றி இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகிகள், 60 ஆண்டுகளுக்கு மேலாக பழைய உபகரணங்களை கொண்டு இந்த ஆலை இயங்கி வருகிறது. எப்பொழுது எது பழுதடையும் என்பது தெரியாமல் பணியாற்றுவதாக தெரிவித்தனர்.

முடிந்தவரை தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இந்த ஆலை நிற்காமல் இயங்க உறுதுணையாக இருப்பதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

வருகின்ற 21ஆம் தேதி நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை துவங்கும் என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...