உடுமலை - மூணாறு சாலையில் மிரட்டும் ஒற்றை யானையால் பரபரப்பு

உடுமலை - மூணாறு சாலையில் உள்ள புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை ஆண் யானை, வாகனங்களை மறித்து தாக்குவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

பருவ மழை குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அமராவதி அணையை நோக்கி, யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் படையெடுத்த வண்ணம் உள்ளது.



இந்நிலையில், ஏழுமலையான் கோவில் முதல் புங்கன் ஓடை பாலம் வரையிலான பகுதியில், ஒரு ஆண் யானை மட்டும் முகாமிட்டுள்ளது.

இவ்வழியே வரும் பேருந்து, லாரி, சுற்றுலா வாகனங்களை மறித்தும், கண்ணாடிகளை உடைத்தும், அச்சுறுத்தி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை யானை வாகனங்களை வழி மறித்து தாக்குகின்றன. யானை கூட்டத்திலிருந்து விலகி வந்து, மிகவும் கோபமான மன நிலையில் சாலை பகுதியில் முகாமிட்டுள்ளது.

எனவே, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...