உடுமலை - மூணாறு சாலையில் மிரட்டும் ஒற்றை யானையால் பரபரப்பு

உடுமலை - மூணாறு சாலையில் உள்ள புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை ஆண் யானை, வாகனங்களை மறித்து தாக்குவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

பருவ மழை குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அமராவதி அணையை நோக்கி, யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் படையெடுத்த வண்ணம் உள்ளது.



இந்நிலையில், ஏழுமலையான் கோவில் முதல் புங்கன் ஓடை பாலம் வரையிலான பகுதியில், ஒரு ஆண் யானை மட்டும் முகாமிட்டுள்ளது.

இவ்வழியே வரும் பேருந்து, லாரி, சுற்றுலா வாகனங்களை மறித்தும், கண்ணாடிகளை உடைத்தும், அச்சுறுத்தி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை யானை வாகனங்களை வழி மறித்து தாக்குகின்றன. யானை கூட்டத்திலிருந்து விலகி வந்து, மிகவும் கோபமான மன நிலையில் சாலை பகுதியில் முகாமிட்டுள்ளது.

எனவே, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...