தாராபுரம் நகராட்சியில் சிறப்பு துப்புரவு பணி - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்!

தாராபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ‘என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணி மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த "என் குப்பை என் பொறுப்பு" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி மற்றும் நகர் மன்றம் இணைந்து “என் குப்பை என் பொறுப்பு” என்ற திட்டம் குறித்து நகர பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாராபுரம் நகராட்சி என்.சி.பி ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையேற்று இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் 25க்கும் மேற்பட்டோரும், நகர் மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் ஆகியோரும் ஒரே இடத்தில் கூடி நகராட்சி பள்ளியை அடுத்த உழவர் சந்தை செல்லும் சாலையில் அப்பகுதி வியாபாரிகளாலும் பொதுமக்களாலும் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கூலங்கள் அனைத்தையும் மாஸ் கிளீனிங் முறையில் முற்றிலுமாக அகற்றி தூய்மைப்படுத்தினர்.



தொடர்ந்து “என் குப்பை என் பொறுப்பு” என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை நகர மன்ற தலைவர், குடியிருப்பு வாசிகளுக்கும் அவ்வழியாக சென்ற பொது மக்களுக்கும் வழங்கினார்.

பின்னர், உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



இதனால் உங்கள் பகுதியில் நோய் பரவலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பதுடன் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன் வார்டு கவுன்சிலர்கள் சீனிவாசன், முபாரக் அலி, மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...