ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை ரத்து செய்க! - காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், MP பதவி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி மத்திய தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மோடிக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...