ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை ரத்து செய்க! - காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், MP பதவி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி மத்திய தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மோடிக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...