சூலூரில் 452 கிலோ குட்கா பறிமுதல் - வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!

சூலூர் அருகே குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்தனர்.



கோவை: சூலூர் அருகே குட்காவை பதுக்கி வைத்திருந்த வட மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்த போலீசார், 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு கடைகளுக்கு குட்கா சப்ளை செய்யப்படுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பள்ளபாளையம் ஆவின் டீக்கடை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 452 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.



மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கார்களில் குட்காவை கடத்தி வந்து உள்ளூர் கடைகளுக்கு சப்ளை செய்து வந்த ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோகன்லால் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...