பழங்குடியினருக்கு சாதிச்சான்று வழங்குவதை காரணமின்றி தாமதிக்க கூடாது..! - கோவை ஆட்சியர் திட்டவட்டம்!

பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பயிற்சிகூட்டம் இன்றும் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. மண்டல அளவிலான பயிற்சியை மானுடவியலாளரான முனைவர் காளிதாஸ் பயிற்சி வழங்கினார்.



இப்பயிற்சி வகுப்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) / மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) சுரேஷ், மற்றும் திருப்பூர், நீலகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.



இப்பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், கிராந்திகுமார் பாடி, பழங்குடியின மக்கள், கடந்த காலங்களில் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த இடங்களில் வாழ்வார்கள், அவர்களின் கலாச்சாரம், மொழி பற்றி அறிந்துகொள்வதும் பழங்குடியின சாதிசான்றிதழ் வழங்குவதும் எளிதாக இருந்தது.

ஆனால் தற்போதைய காலத்தில் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து நகரங்களில் வாழ்கின்றனர். நவீன கல்வி பயின்ற பழங்குடியின மக்களின் பேசும் மொழி கலாச்சாரங்கள் மாறி உள்ளது.

பழங்குடியின மக்களின் பூர்வீகம், வனம் அல்லது மலை பகுதிகளாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு, வேலை விஷயமாக நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும், பழங்குடியின மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கும்போது, சரியானவர்களுக்கு உரிய காலத்தில் விரைவாக வழங்க வேண்டும். சான்றிதழ்கள் வழங்க தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது.

பழங்குடியினர் ஏதாவது ஒரு அரசுப் பணியில் இருக்கலாம், படித்து கொண்டு இருக்கலாம், அவர்களுக்கு அந்த சான்றிதழ் மிக அவசியமானதாகும். பழங்குடியினர் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்த்தல் தொடர்பாக கண்காணிப்பு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

இப்பயிற்சி வகுப்பினை நன்முறையில் பயன்படுத்தி சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...