பழங்குடியினருக்கு சாதிச்சான்று வழங்குவதை காரணமின்றி தாமதிக்க கூடாது..! - கோவை ஆட்சியர் திட்டவட்டம்!

பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பயிற்சிகூட்டம் இன்றும் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. மண்டல அளவிலான பயிற்சியை மானுடவியலாளரான முனைவர் காளிதாஸ் பயிற்சி வழங்கினார்.



இப்பயிற்சி வகுப்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) / மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) சுரேஷ், மற்றும் திருப்பூர், நீலகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.



இப்பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், கிராந்திகுமார் பாடி, பழங்குடியின மக்கள், கடந்த காலங்களில் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த இடங்களில் வாழ்வார்கள், அவர்களின் கலாச்சாரம், மொழி பற்றி அறிந்துகொள்வதும் பழங்குடியின சாதிசான்றிதழ் வழங்குவதும் எளிதாக இருந்தது.

ஆனால் தற்போதைய காலத்தில் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து நகரங்களில் வாழ்கின்றனர். நவீன கல்வி பயின்ற பழங்குடியின மக்களின் பேசும் மொழி கலாச்சாரங்கள் மாறி உள்ளது.

பழங்குடியின மக்களின் பூர்வீகம், வனம் அல்லது மலை பகுதிகளாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு, வேலை விஷயமாக நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும், பழங்குடியின மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கும்போது, சரியானவர்களுக்கு உரிய காலத்தில் விரைவாக வழங்க வேண்டும். சான்றிதழ்கள் வழங்க தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது.

பழங்குடியினர் ஏதாவது ஒரு அரசுப் பணியில் இருக்கலாம், படித்து கொண்டு இருக்கலாம், அவர்களுக்கு அந்த சான்றிதழ் மிக அவசியமானதாகும். பழங்குடியினர் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்த்தல் தொடர்பாக கண்காணிப்பு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

இப்பயிற்சி வகுப்பினை நன்முறையில் பயன்படுத்தி சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...