கோவையில் கல்லூரி மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பு - கடை உரிமையாளருக்கு தர்மஅடி!

கோவை பி.என்.பாளையத்தில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் ராமு என்பவர், கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், பெண்களை தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், கடை உரிமையாளர் ராமுவை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது41). இவர் வீட்டின் அருகே ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி இறந்த நிலையில் தனது 21 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் இவரது கடைக்கு வந்த தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் தயாநிதிமாறன் என்ற மாணவர் ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அப்போது, ராமுவின் செல்போனில் கல்லூரி மாணவரின் வகுப்பில் படிக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இதைக்கண்ட மாணவர் அந்த செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்தார். மேலும், செல்போனை பார்த்தபோது கடைக்கு வந்த ஏராளமான மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படத்தை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி மாணவர் கடை உரிமையாளரான ராமுவிடம் கேட்டபோது, ராமு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அங்கு வந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து ராமுவை கடுமையாக தாக்கி பந்தயசாலை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் ராமு தனது கடைக்கு வரும் மாணவிகள், பெண்களை செல்போனில் படம் எடுத்து கடையில் யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...