கோவையில் கல்லூரி மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பு - கடை உரிமையாளருக்கு தர்மஅடி!

கோவை பி.என்.பாளையத்தில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் ராமு என்பவர், கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், பெண்களை தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், கடை உரிமையாளர் ராமுவை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது41). இவர் வீட்டின் அருகே ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி இறந்த நிலையில் தனது 21 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் இவரது கடைக்கு வந்த தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் தயாநிதிமாறன் என்ற மாணவர் ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அப்போது, ராமுவின் செல்போனில் கல்லூரி மாணவரின் வகுப்பில் படிக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இதைக்கண்ட மாணவர் அந்த செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்தார். மேலும், செல்போனை பார்த்தபோது கடைக்கு வந்த ஏராளமான மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படத்தை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி மாணவர் கடை உரிமையாளரான ராமுவிடம் கேட்டபோது, ராமு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அங்கு வந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து ராமுவை கடுமையாக தாக்கி பந்தயசாலை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் ராமு தனது கடைக்கு வரும் மாணவிகள், பெண்களை செல்போனில் படம் எடுத்து கடையில் யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...