உடுமலை அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). இவர் நண்பர்களுடன் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞர், நீரில் முழ்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). தந்தையுடன் இணைந்து விவசாயப் பணிகளை கவனித்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாயார் கீதா மற்றும் தந்தை ராஜாமணியுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் சுரேஷ்குமார் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளித்துள்ளனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற நண்பர்கள் முயற்சி செய்தும், முடியாமல் ஆற்று நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக உடுமலை தீயணைப்புத் துறை மற்றும் மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அமராவதி ஆற்றில் மிதவைகள் உதவியுடன் தேடினர்.



நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றில் மூழ்கிய சுரேஷ்குமாரை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...