உடுமலை அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). இவர் நண்பர்களுடன் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞர், நீரில் முழ்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). தந்தையுடன் இணைந்து விவசாயப் பணிகளை கவனித்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாயார் கீதா மற்றும் தந்தை ராஜாமணியுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் சுரேஷ்குமார் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளித்துள்ளனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற நண்பர்கள் முயற்சி செய்தும், முடியாமல் ஆற்று நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக உடுமலை தீயணைப்புத் துறை மற்றும் மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அமராவதி ஆற்றில் மிதவைகள் உதவியுடன் தேடினர்.



நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றில் மூழ்கிய சுரேஷ்குமாரை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...