வால்பாறை பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளியை ஒட்டி கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.


கோவை: புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை சுமந்து மலை மேல் ஏறி கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு கல்வாரி மலையில், சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூறும் வண்ணம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பாவிகளுக்காக தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதும் 40 நாட்கள் நோன்பு தினமாக கடைப்பிடித்து வந்தனர்.



இன்று புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு, வால்பாறையில் உள்ள csi ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் போன்ற கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இந்த நாளை அனுசரித்தனர்.



ரொட்டிக்கடை பகுதியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில், சிலுவையை தோளில் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின்மேல் ஏறி சிலுவை சுமந்து சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மலை மீது ஏறி இயேசு கல்வாரி மலையில் சிலுவை சுமந்து சென்றதைப் போல் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து சென்று 14 இடங்களில் பிரார்தனை செய்து மலை மேல் சென்று சிலுவை வைத்து பிரார்த்தனை செய்து வந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...