கோவையில் காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் என்பவர் காட்டு யானை தாக்கி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறை மற்றும் ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது தண்ணீர் பந்தல் அருகே உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைடுத்து, அங்கு ஆய்வு செய்தபோது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் (வயது39) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு அவ்வழியாக வந்தபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடல் கிடந்த 150 மீட்டரில் அடர் வனப்பகுதி என்பதால் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம்,மத்துவராயபுரம் பகுதிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...