கோவையில் காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் என்பவர் காட்டு யானை தாக்கி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறை மற்றும் ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது தண்ணீர் பந்தல் அருகே உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைடுத்து, அங்கு ஆய்வு செய்தபோது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் (வயது39) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு அவ்வழியாக வந்தபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடல் கிடந்த 150 மீட்டரில் அடர் வனப்பகுதி என்பதால் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம்,மத்துவராயபுரம் பகுதிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...