2024ல் ஜுப்லியன்ட் எக்ஸ்போ - கோவை ரேஸ்கோர்ஸில் முன்னோட்டம்!

கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள ஜுப்லியன்ட் எக்ஸ்போ- 2024 கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் தாஜ்விவான்டா ஓட்டலில் நடைபெற்றது.


கோவை: கோவையிலுள்ள ஜுப்லியன்ட் கோயமுத்துார் பவுன்டேசன் அமைப்பு, ஜுப்லியன்ட் கோயமுத்துார் 2024 வளர்ச்சிமிகு கொங்குநாடு என்ற தொழில்முனைவோர்களுக்கான உதவும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு சார்பில் ஜுப்லியன்ட் எக்ஸ்போ 2024 என்ற பிரம்மாண்ட கண்காட்சி மற்றும் மாநாடு கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற 20 நாடுகளில் இக்கண்காட்சி குறி்த்த விழிப்புணர்வு ‘ரோட்ஷோ’நடத்தப்படுகிறது.

ஜவுளி, உணவு, தங்கநகை உற்பத்தி, கட்டுமானம், காகிதம், தகவல் தொழில் நுட்பம், ரயில்வே, தொலைதொடர்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை உள்ளிட்டவை அடங்கும். இதன் வாயிலாக கோவையில் புதிய பொருளாதார மண்டலங்கள் உருவாகும். தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வர்த்தக பூங்காக்கள் உருவாகும்.

இக்கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 10 முதல் 12 வரை கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் நடக்கிறது. இக்கண்காட்சியில் 300 நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன. 5,000 முதல் 8,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சர்வதேச அளவில் 20 நாடுகளை சேர்ந்த 300 தொழில்துறையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியை ‘பேம்’தமிழ்நாடு மேலாண் இயக்குனர் சிகிதாமஸ் வைத்தியன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில், ஜுப்லியன்ட் கோயமுத்துார் பவுன்டேசன் அமைப்பு தலைவர் அபுதாஹீர், இயக்குநர்கள் சதீஷ்குமார், சந்தோஷ், முகமதுநாசர், அருண், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன், இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் அருணாசலம், கொடிசியா தலைவர் திருஞானம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும், தொழில் முனைவோர்களும் சர்வதேச பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...