புனித வெள்ளி அனுசரிப்பு - சிலுவையை சுமந்தபடி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

புனித வெள்ளியையொட்டி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.


கோவை: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் கணத்த நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக அனுசரிக்கப்படும் இந்த நாளை கிறிஸ்துவர்கள் அனைவரும் சோக நாளாக அனுசரிக்கின்றனர்.



இன்றிலிருந்து மூன்றாம் நாள் இயேசு உயிர்தெழுந்த நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். புனித வெள்ளி தினமான இன்று கிறிஸ்தவர்கள் பலரும் சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்வர். அதன்படி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.



பெரியக்கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...