கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை - கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்

கோவை திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட 11 கண்காணிப்பு கேமிராக்களை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை அமைத்து வருகின்றனர்.



அதன் இயக்கங்கள் அனைத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் ஜோதிபுரத்தைச் சேர்ந்த சுபா பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் 1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு கேமிராக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.



இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.



அப்போது, கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்துக் கொடுத்த சுபா பிளாஸ்டிக்ஸ் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர், குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...