வால்பாறை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று சுப்பிரமணியசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் நல்லகாத்து பாலம் பகுதியில் இருந்து 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராம மக்கள் சார்பாக பக்தர்கள் 131 பால்குட தீர்த்தம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



மேலும் ஏராளமான பக்தர்கள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பால் காவடி மற்றும் பறவை காவடி சுமந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரை ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.



இந்த நிகழ்வில், சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...