தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தாராபுரம் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கிலோ ரூ.9க்கு விற்பனை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள், சில்லறையாகக் கொடுக்காமல் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால், தரமற்ற தக்காளிகளை விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குச் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளிகளை பெட்டியில் அடுக்கி வைத்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.



அதன்படி உழவர் சந்தையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ஒன்பது ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தக்காளியை சில்லறையாக விற்பனை செய்யாமல், 15 கிலோ எடைக் கொண்ட பெட்டிகளை வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் தரமற்ற தக்காளியை மட்டுமே விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரமான தக்காளியை வாங்க உழவர் சந்தைக்கு வந்தால், அங்கும் தரமற்ற தக்காளிகளே விற்பனை செய்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்து, சில்லறையில் வாங்கும் பொது மக்களுக்கு அனைத்து காய்கறிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...