உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


திருப்பூர்: உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது.

உச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் சக்தி பூஜை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



கடந்த 31-ந் தேதி சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலிலிருந்து திருமூர்த்தி மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.



சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு வளர்த்துக் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சியும் இரவு பொதுமக்கள் பரிவட்டத்துடன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மாகாளியம்மனுக்கு சக்தி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் காலை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் வானவேடிக்கையும் நடைபெறுகிறது.

இரவு கம்பம் பிடுங்கி கங்கையில் விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், அபிஷேகம், பூஜையும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி, எஸ் அம்மாபட்டி, பொட்டிநாயக்கனூர், ரத்தினம்மாள் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...