கோவைக்கு வந்த புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

பெங்களூரில் இருந்து கோவை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கு என்று 7,579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.



மேலும் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெங்களூர் பெல் நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்படுகிறது.



இந்த வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி இன்று நேரில் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொ) குணசேகரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயலெட்சுமி, மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...