பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் வரி குறைப்பு - பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்!

பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு சொத்து வரி குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரிபல மடங்கு உயர்த்தப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வியாபாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



சொத்து வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்..

மேலும் தொடர்ந்து பெருமாள் செட்டி வீதி, ராஜாமில் ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று வணிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...