பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் வரி குறைப்பு - பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்!

பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு சொத்து வரி குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரிபல மடங்கு உயர்த்தப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வியாபாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



சொத்து வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்..

மேலும் தொடர்ந்து பெருமாள் செட்டி வீதி, ராஜாமில் ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று வணிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...