பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் வரி குறைப்பு - பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்!

பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு சொத்து வரி குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரிபல மடங்கு உயர்த்தப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வியாபாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



சொத்து வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்..

மேலும் தொடர்ந்து பெருமாள் செட்டி வீதி, ராஜாமில் ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று வணிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

Newsletter

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...