கே.ஜி பவுண்டேஷன் சார்பில் ஆளுமை விருது வழங்கும் விழா - தமிழக ஆளுநர் பங்கேற்பு

கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, Dynamic Indian of Millenium, Personality of the Decade என இரண்டு விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கினார்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி. அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

கோவை கே.ஜி மருத்துவமனை மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல் உள்ளிட்ட கே.ஜி குடும்ப நிறுவனங்கள் சார்பில் கே.ஜி பவுண்டேஷன் அமைப்பில் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'Dynamic Indian of Millenium', 'Personality of the Decade' என இரண்டு விதமான விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட்டது.

கே.ஜி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர்.ஜி.பக்தவச்சலம், கே.ஜி மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...