ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரம்: கோவையில் வெல்ஃபேர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெல்ஃபேர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


கோவை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் வெல்ஃபேர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெல்ஃபேர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அக்கட்சியின் மாவட்ட தலைவர் முஜ்புர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பப்பட்டது.

இதில் வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மணிமாறன், செயலாளர் சிக்கந்தர் பாஷா உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 60 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்ன...

லாரியின் இடதுபுற சக்கரம் ஏறி சைக்கிள் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 70 வயது காளிமுத்து சைக்கிளில் சென்றபோது, அலட்சியமாக வந்த லாரி மோதியது. கீழே விழுந்த காளிம...