தாராபுரம் அருகே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் - தீவிபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தச்சன்புதூரில் எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்த குடிசையில் மதுகுடிப்பகம் செயல்படுகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தச்சன்புதுரில் டாஸ்மாக் பார் ஓலை குடிசையில் இயங்கி வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டிவதைத்து வருகிறது.



இந்த நிலையில், எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்து மதுபார் செயல்படுவதால் அங்கு மதுப்பிரியர்கள் மது அருந்தும்போது, குடிபோதையில் சிகரெட், பீடி பிடித்துவிட்டு, அதை அணைக்காமல் அப்படியே கீழே போட்டு செல்கின்றனர்.



இது காற்றில் பறந்து கூரையின் மீது விழுந்தால் எந்த நேரமும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலகம் அருகிலேயே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...