உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கி்ங் கட்டணம் வசூல் - பயணிகள் புகார்

உடுமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை ரயில் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தை தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் வாகனங்களை பாதையை மறித்து நிறுத்துவதால், செல்வதற்கு இடமில்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று உடுமலை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது, ரயில் நிலையத்தில் பைக்குகளை நிறுத்துவதற்கு கட்டணமாக 12 மணி நேரத்துக்கு ரூ.15-ம், 24 மணி நேரத்துக்கு ரூ.20-ம் வசூலிக்கின்றனர். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே நிறுத்தி விட்டு சென்றாலும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் முறையாகப் பதில் அளிப்பதில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...