கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது - 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த கணேசன் மற்றும் சுப்ரமணியன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தனிப்படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணிகளிலும் கோலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் நீலாம்பூர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.



அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (36) மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (40) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது, ஆட்டோ மற்றும் பைக் மூலம் கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.18,200 ரொக்கம், ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...