கோவை தனியார் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவையில் சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்துக்காக சிகிச்சை பெற்றுவந்த சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த புகழ்ராஜா என்பவர் இன்று அதிகாலை மருத்துவமனையின் 5ஆவது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் புகழ்ராஜா (வயது37). கடந்த மார்ச் 19 ஆம் தேதி விபத்தில் சிக்கிய அவர், மேல் சிகிச்சைக்காக கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த புகழ்ராஜா, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 5ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியே கீழே குதித்தார்.

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அவருக்கு ஏற்பட்ட விபத்தில் மன ரீதியாகவும் புகழ்ராஜா பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தததும் தெரியவந்துள்ளது.

மேலும், புகழ்ராஜாவை கவனித்துக்கொள்ள அவரது உறவினர்களும் அறையில் இருந்த நிலையில், அதிகாலையில் அனைவரும் அசந்த நேரத்தில் ஜன்னல் வழியாக குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...