கோவை தனியார் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவையில் சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்துக்காக சிகிச்சை பெற்றுவந்த சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த புகழ்ராஜா என்பவர் இன்று அதிகாலை மருத்துவமனையின் 5ஆவது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் புகழ்ராஜா (வயது37). கடந்த மார்ச் 19 ஆம் தேதி விபத்தில் சிக்கிய அவர், மேல் சிகிச்சைக்காக கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த புகழ்ராஜா, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 5ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியே கீழே குதித்தார்.

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அவருக்கு ஏற்பட்ட விபத்தில் மன ரீதியாகவும் புகழ்ராஜா பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தததும் தெரியவந்துள்ளது.

மேலும், புகழ்ராஜாவை கவனித்துக்கொள்ள அவரது உறவினர்களும் அறையில் இருந்த நிலையில், அதிகாலையில் அனைவரும் அசந்த நேரத்தில் ஜன்னல் வழியாக குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...