ஈஷா மையத்திற்கு வரும் மோடியை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஈஷா யோகா மையத்தின் மீதும், ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி மீதும் அவதூறு பரப்பி எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை கோவை வரவுள்ளார்.

இதனிடையே, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈஷா யோகா மையத்தின் மீதும், மோடியின் மீதும் எதிர்ப்பு தெரிவித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். 



இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. காருண்யா நிறுவனத்தின் பின்னணியும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் தூண்டுதல் பேரில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள், சவுக்கு, வினவு உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, ஈஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நடைபெற்று வரும் அவதூறு பிரச்சாரங்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...