கொளுத்தும் கோடை வெயில் - கோவை குற்றால அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

. கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்வீச்சிகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.


கோவை: கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



தமிழகத்தில் கோடைக்காலம் 2 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ளவும், குளுமையை அனுபவிக்கவும், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.



குறிப்பாக கோவையிலுள்ள சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.



மேலும் அருவியில் குளிக்கும் பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...