கொரோனா முன்னெச்சரிக்கை - கோவை அரசு மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. நேற்றைய (மார்ச்.31) நிலவரப்படி கோவையில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதுவரை 108 பேருக்கு தொற்றுபாதித்துள்ளது.

சென்னை 38 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுவரை தமிழகத்தில் 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் இன்று முதல் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக சிம்பிளிசிட்டியிடம் பேசிய மருத்துவமனையின் இயக்குநர் நிர்மலா, மருத்துவமனை என்பது கொரோனா உள்ளிட்ட அனைத்து வகையான தொற்றுகளுக்குமான மையமாக உள்ளது. எனவே, நோய் தொற்று குறித்து முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தவும், நோயிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மருத்துவமனையில் இன்று 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலைத் தடுக்கவும், குறைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...